திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி தொடக்க பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து தயாரித்த 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்டு வந்திருந்தனர்.
புவிசார் உணவுகள், எண்ணெய் இல்லாமல் சமையல் என 11க்கும் மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டு உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ருசித்து மகிழ்ந்தனர்.