திருச்சி உய்யகொண்டான் கால்வாயை சீரமைக்க கோரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி உய்யகொண்டான் கால்வாயை சீரமைக்க கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 9, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே உள்ள மாயனூரில் கால்வாயை வெட்டி அதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களுக்கு பாசன வசதியை மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டப்பட்ட இந்த உய்யகொண்டான் கால்வாய், இன்றளவும் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.

ராஜராஜ சோழனின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக திகழும் இந்த உய்யகொண்டான் கால்வாய், பாசன வசதியோடு மட்டுமின்றி, ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளையும் நிரப்பும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் உய்யகொண்டான் கால்வாயின் மூலம் பாசன வசதியை பெறுகின்றன. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்த இக்கால்வாயில் தற்போது கழிவுநீர் கலந்து நீரின் தன்மை மோசமடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாநகரப்பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களின் கழிவுநீர் நேரடியாக உய்யக்கொண்டான் கால்வாயில் திறந்து விடப்படுவதால், கால்வாய் முழுவதுமே மோசமான நிலையில் இருப்பதால் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைத் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கியும் வந்த உய்யக் கொண்டான் கால்வாயை உடனடியாக சீரமைத்து, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags: Uyyakonda Canal renovation workMayanurwater management.trichyUyyakonda CanalEmperor Rajaraja Cholan
ShareTweetSendShare
Previous Post

குன்றத்தூர் அருகே சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

Next Post

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies