வாடகை வாகனங்களில் QR Code - குற்ற செயல்களை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை - சிறப்பு தொகுப்பு!
Sep 30, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாடகை வாகனங்களில் QR Code – குற்ற செயல்களை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Mar 9, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்புவோர், போதிய பேருந்துகள் இல்லாத பட்சத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அப்படியான பயணம் சில நேரங்களில் மிகுந்த ஆபத்துமிக்க பயணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறவும் அப்பயணங்கள் பெரும் காரணங்களாக உள்ளன.

இரவு நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் க்யூ ஆர் கோடு பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகள், அசாதாரண சூழலை உணர்ந்தால், தங்களுடைய செல்போனில் அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து SOS பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கவே அச்சப்படும் சூழலில், சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் க்யூ ஆர் கோடு திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பொதுப்போக்குவரத்து என அனைத்துவிதமான இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த க்யூ ஆர் கோடு திட்டம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 

Tags: tamilnaduolaChennai Metropolitan PoliceQR codes in rented vehiclesSOS buttonRapido
ShareTweetSendShare
Previous Post

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – வக்ஃபு மசோதா, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்!

Next Post

புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies