லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2025, 07:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், நக்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லண்டன் வாழ் இந்தியரான கவிராஜ் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த மார்ச் மாதம் தனியார் மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண் காயத்ரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் 50 சவரன் நகைகளும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனக்கூறிய கவிராஜ், திருமணமான 18-வது நாளே தன்னுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவரை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கவிராஜின் பெற்றோர் அளித்த விளக்கத்தில், திருமணம் முடிந்த பிறகு காயத்ரி தனது தந்தைக்கு அதிகளவு கடன் இருப்பதாக கூறி 50 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே லண்டன் வந்து கவிராஜனுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பிடித்திருந்த காரணத்தால் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: UsilampattiGayathriMadurai District Collector's OfficeNakkalapattiGayathri filed a complaint aganist husband
ShareTweetSendShare
Previous Post

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Next Post

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சி – தனியார் நிறுவனம் அறிமுகம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies