லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2025, 07:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், நக்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லண்டன் வாழ் இந்தியரான கவிராஜ் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த மார்ச் மாதம் தனியார் மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண் காயத்ரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் 50 சவரன் நகைகளும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனக்கூறிய கவிராஜ், திருமணமான 18-வது நாளே தன்னுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவரை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கவிராஜின் பெற்றோர் அளித்த விளக்கத்தில், திருமணம் முடிந்த பிறகு காயத்ரி தனது தந்தைக்கு அதிகளவு கடன் இருப்பதாக கூறி 50 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே லண்டன் வந்து கவிராஜனுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பிடித்திருந்த காரணத்தால் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: UsilampattiGayathriMadurai District Collector's OfficeNakkalapattiGayathri filed a complaint aganist husband
Share
Tweet
SendShare
Previous Post

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Next Post

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சி – தனியார் நிறுவனம் அறிமுகம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies