மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மொரிஷியஸ் நாட்டின் தேசிய விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றார். அப்போது மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Star விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அறிவித்தார்.
இதை தொடர்ந்து போர்ட் லூயிஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது, மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையிலான உறவுக்கு கிடைத்த மரியாதையாக இந்த விருதை கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், மொரிஷியஸ் நாட்டில் ஒரு மினி இந்தியா வாழ்வதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னதாக மகா கும்பமேளா புனித நீரை மொரீசியஸ் அதிபருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். இதுகுறித்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய அவர், மொரீஷியஸின் பல குடும்பங்களால் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர்களின் உணர்வுகளைப் பற்றி, தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே, கும்பமேளா புனித நீரை கங்கை தாலாவ் ஏரியில் கலக்க உள்ளதாக கூறிய பிரதமர், கங்கை அன்னையின் அருளால் மொரீஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.