தமிழகத்தில் மதுபான ஊழல் - சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!
Jun 4, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2025, 07:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ஆலை குழுமத்தின் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு கலால் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட வேண்டிய மது பாட்டில்கள் ஆலைகளில் இருந்து நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அமலாக்கத்துறையின் சோதனை ஊழலுக்கான முகாந்திரம் இல்லாமல் நடத்த வாய்ப்பில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்குள் நடைபெற்ற சோதனை குறித்து தமிழக அரசு மவுனம் காக்கும் நிலையில், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தையும் புரட்டிப் போடும் அளவுக்கு டாஸ்மாக் மெகா ஊழல் நடந்துள்ளதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருப்பது வெட்கக் கேடு என அதிமுக விமர்சித்துள்ளது.

முன்னதாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுவதாக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் புகாரளித்திருந்தார்.

மேலும், மதுபான ஊழல் முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், ஊழல் புகாரை மறைக்கவே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு என திமுக அரசு நாடகமாடுவதாக விமர்சித்துள்ளன.

மேலும் மதுபான ஊழல் புகாரால் டெல்லி, சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: Enforcement Directorate raidSNJ Distillery GroupDMK MP Jagathrakshagan.ChennaiTamil Nadutasmacegmore
ShareTweetSendShare
Previous Post

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனியாக சென்றவரை உள்நோயாளியாக அனுமதிக்க மறுப்பு!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies