உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவார் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம் மிகவும் முக்கியமானது என்றும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா போரால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் வேதனை தெரிவித்தார்.