தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்
Jan 14, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்

Murugesan M by Murugesan M
Mar 15, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் முந்திரி வாரியம் உருவாக்கப்படும் எனவும் அதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண் அமைபனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் பத்து லட்சம் பனைவிதைகள் பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், ஊடுபயிர் போன்ற திட்டங்களை ஊக்குவிக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேதாரண்யம் முல்லைப்பூ , நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்

அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், விரைந்து தீர்வு காணும் வகையிலும் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் விவசாய நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையை படித்த அமைச்சர் 2025-26-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆயிரத்து 427 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் நடப்பாண்டில் நெல் ஊக்கத்தொகை வழங்கிட 522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி டெல்டா பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

எனவே மொத்தமாக வேளாண் துறைக்கு 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: New Cashew Board in Tamil Nadu: In the Agriculture Budgetவேளாண் பட்ஜெட்டில்முந்திரி வாரியம்
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Next Post

ஆளுநர் மாளிகை வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் ரவி!

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies