தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்
Sep 10, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்

Murugesan M by Murugesan M
Mar 15, 2025, 01:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் முந்திரி வாரியம் உருவாக்கப்படும் எனவும் அதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண் அமைபனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் பத்து லட்சம் பனைவிதைகள் பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், ஊடுபயிர் போன்ற திட்டங்களை ஊக்குவிக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேதாரண்யம் முல்லைப்பூ , நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்

அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், விரைந்து தீர்வு காணும் வகையிலும் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் விவசாய நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையை படித்த அமைச்சர் 2025-26-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆயிரத்து 427 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் நடப்பாண்டில் நெல் ஊக்கத்தொகை வழங்கிட 522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி டெல்டா பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

எனவே மொத்தமாக வேளாண் துறைக்கு 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: New Cashew Board in Tamil Nadu: In the Agriculture Budgetவேளாண் பட்ஜெட்டில்முந்திரி வாரியம்
Share
Tweet
SendShare
Previous Post

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Next Post

ஆளுநர் மாளிகை வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் ரவி!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies