விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு நன்கொடை கேட்டு கோயில் ஊழியரை தவெக நிர்வாகிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சாமிநாதபுரத்தில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த மாதம் அப்பகுதியில் நடந்த கோயில் நிகழ்ச்சிக்காக, தவெக நிர்வாகி ஸ்ரீநாத் என்பவர், கோயில் ஊழியர் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரிடம் நன்கொடை கேட்டுள்ளார்.
அவர்களின் மிரட்டலுக்கு பயந்து 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக ஸ்ரீநாத் தலைமையில் 5 பேர் நன்கொடை கேட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, கோயில் ஊழியர் நன்கொடை தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் கோயில் ஊழியரின் மனைவி லதாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கோயில் ஊழியரையும் சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அங்கிருந்த தடுப்புகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். தவெக நிர்வாகிகள் கஞ்சா போதையில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















