5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வருகை தந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர்.
அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதனை தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரைச் சந்தித்து, இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து கிறிஸ்டோபர் லக்சன் விவாதிக்கிறார்.