ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
கடந்த சில மாதங்களாகத் தோடா, சோனாமார்க், குல்காம், புல்வாமா என பல பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அந்தவகையில், குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவால் பார்க்கும் இடமெல்லாம் ரம்மியமாகக் காணப்படுகிறது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பனிச்சறுக்கு, ஒருவர் மீது ஒருவர் பனியை எறிந்தும் விளையாடி உற்சாகமடைந்தனர்.