இந்தியாவிற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா பயன்படுத்தினால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களைக் கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.
மேற்கண்ட 4 சட்டங்களுக்குப் பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறியவுடன் பழைய 4 சட்டங்களும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.