சந்திரனை ஆய்வு செய்வதற்கான ‘சந்திரயான்-5’ திட்டப்பணிக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், சந்திராயன்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்து செல்லும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜப்பானுடன் இணைந்து சந்திராயன்-5 திட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார்.