பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் : காரசார விவாதம்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் : காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை கூடியதும் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவையை விட்டு அப்பாவு வெளியேறினார். பேரவை துணைத் தலைவர் அவையை நடத்தினார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது அவரது கடமை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், பேரவைத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதாக கூறினார்.

இதனிடையே விவாதத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடைய பேரவைத் தலைவர், அமளியில் ஈடுபடுவர்களை அமைதிப்படுத்தவே விரும்புவார் என்றும், அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை திசைதிருப்ப நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து டிவிஷன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் குரல், டிவிஷன் என இருமுறைகளிலும் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது இருக்கையில் பேரவைத் தலைவர் அப்பாவு அமர்ந்தார்.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்தனர்.

Tags: today TN ASSEMBLYNo-confidence motion against the Speaker of the House: A heated debate!
ShareTweetSendShare
Previous Post

துளசி கப்பார்ட் – அஜித் தோவல் இடையே பேச்சுவார்த்தை!

Next Post

ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? : பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies