மூளையின் உத்தரவுக்கு இணங்கும் ரோபோடிக் கையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம் பக்கவாதத்தால் கைகள் செயல் இழந்த நபர்கள், மிகுந்த பயனடைய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புத்தகத்தைத் தூக்குவது, மேசையைத் திறப்பது என பல்வேறு பணிகளை நமது சொந்த கையில் செய்வதைப் போல ரோபோடிக் கையை பயன்படுத்தி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.