உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நடிகை நமிதா சாமி தரிசனம் செய்தார்.
சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில், கணவருடன் நடந்து சென்று நமிதா தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், நடிகை நமிதாவுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மூதாட்டி ஒருவருக்கு நமீதா மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.