பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் என்ற சாதனையை இளையராஜா படைத்தாா்.
இந்நிலையில் பிரதமர் மோடியை இளையராஜா நேரில் சந்தித்தார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக கூறியுள்ளார்.
மேலும் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசியதாக பதிவிட்டுள்ள இளையராஜா பிரதமர் மோடியின் அன்புக்கும், ஆதரவுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.