சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார்.
இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பட்ஜெட் விவாதம் மீதான அவை நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய அவருக்கு அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் எந்த இசையமைப்பாளரும் எட்ட முடியாத உயரத்தை இளையராஜா அடைந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றியதன் மூலம் நாட்டின் பெருமையைச் சர்வதேச தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.