நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக இருக்கும் பிரபுதேவா திருப்பதிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, விஐபி வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் கொடுத்து மரியாதை செய்தனர்.
திருமலையில் பிரபுதேவாவைப் பார்த்த ரசிகர்கள், அவரை சூழ்ந்து புகைப்படங்களை எடுத்தனர்.