தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசு - நாளை பாஜக கருப்புக் கொடி போராட்டம்!
Sep 25, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசு – நாளை பாஜக கருப்புக் கொடி போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும்.

அரசு அதிகாரிகளுக்கும். காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார்  ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி, கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால், கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக விவசாயிகளை விட அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது அவருக்கு. மேகதாது அணை, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அரசு தெளிவுபடுத்திய பின்னரும், மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் திரு. D.K. சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட, தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?  என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது. மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான் கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் திரு பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும். நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு. அவரவர் வீட்டு முன்பாக நின்று. தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: அண்ணாமலை அறிவிப்புDMKbjp k annamalaikerala cm pinarayi vijayanBJP to hold black flag protest against DMK government tomorrow: Annamalai announcement!
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : நிலத்தகராறில் இளைஞர் கொலை – 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

இராமேஸ்வரம் : இராஜஸ்தான் பக்தர் மரணம் – இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்!

Related News

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

குடியாத்தம் அருகே குழந்தையை கடத்தியவர் கைது!

திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்!

யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிளே ஸ்டேஷன் STATE OF PLAY நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட டிரெய்லர்!

பொருளாதாரம் வலுவடையும் போது, வரிச்சுமை குறையும் : பிரதமர் மோடி

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் நெத்திமேடு சாலையை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறையினர்!

இந்தியா பெரும்பாலும் எங்கள் பக்கம்தான் – ஜெலன்ஸ்கி

சென்னை : அமலாக்கத்துறையின் சோதனை 7 மணி நேரத்திற்கு பின் நிறைவு!

டெக்சாஸ் : டஜன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ள அரிய வகை ஜெல்லி மீன்கள்!

விருதுநகர் : அமேசான் பார்சலில் water flask-க்கு பதில் கல் இருந்ததால் அதிர்ச்சி!

தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!

மொழிப் பிரச்னைக்கு வாட்ஸ்அப் கொண்டு வரும் முக்கிய அப்டேட்!

செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies