திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ், நார்த்த வாடா என்ற கிராமத்திற்கு அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
15 இடங்களில் வெட்டுக்காயம் உள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை உடலை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.