மியாசாகி உலகின் விலையுயர்ந்த மாம்பழம் : ஒரு மாம்பழம் ரூ 10,000/-!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மியாசாகி உலகின் விலையுயர்ந்த மாம்பழம் : ஒரு மாம்பழம் ரூ 10,000/-!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த், ருமானி போன்ற பிரபலமான மாம்பழ வகைகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒரு பெண் விவசாயி, மியாசாகி மாம்பழங்கள்  ஒவ்வொன்றையும்  10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.  ஒரு மாம்பழம்  10 ஆயிரம் ரூபாயா ?  அப்படியென்ன சிறப்பு மியாசாகி மாம்பழத்தில் ?  என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மியாசாகி மாம்பழம் ஜப்பானின் கியூஸு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரத்தில் உருவானதாகும். 1980ம் ஆண்டு உள்ளுர் விவசாயிகளுடன் சேர்ந்து  மியாசாகி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பழைய வகை இனப் பெருக்க நுட்பங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் விளைவாக மியாசாகி மாம்பழம்  கண்டுபிடிக்கப் பட்டது. பிரகாசமான நிறத்துடன் தனித்துவமான முட்டை வடிவத்துடன் விளங்கும் மியாசாகி மாம்பழம்  சூரியனின் முட்டை என்று அழைக்கப் படுகிறது.

இது சுவையானது மட்டுமில்லாமல் நீண்ட ஆயுளையும் கொண்டுள்ளது. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கின்றன.  கண் பார்வைக்கும், சீரான செரிமானத்த்துக்கும் உதவுகின்றன.

இந்த மியாசாகி மாம்பழம் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுகிறது. ஜப்பானில், மியாசாகி மாம்பழத்தின் சில்லறை விலை சுமார் 8600 ரூபாய் ஆகும். ஜப்பானில் ஒரு டஜன் மியாசாகி மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி சுமார் இரண்டரை லட்சம் வரை விற்கப் படுகிறது.

சமீபத்தில், (Nanded)நாந்தேட்டில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, தானிய விழா அரசு சார்பில் நடத்தப் பட்டது. இந்த நிகழ்வில், விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் சுமார் 82 கடைகள் அமைக்கப் பட்டிருந்தன.  இந்த விவசாய கண்காட்சியில், மியாசாகி மாம்பழங்களைக் கொண்டு வந்த சுமன்பாய் என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

தெலுங்கானாவில் உள்ள போசி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சுமன்பாய் கெய்க்வாட்டின் மகன் நந்த்கிஷோர் UPSC தேர்வுகாக தயாராகி கொண்டிருந்தார்.  கோவிட் தொற்று நோய் காலத்தில், ஊரடங்கு காரணமாக பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதால், தனது கிராமத்துக்குத்  திரும்பிய நந்த்கிஷோர் ஆன்லைனில் படிப்பைத் தொடர்ந்தார். ஒருநாள், தற்செயலாக மியாசாகி மாம்பழங்கள் பற்றிய தகவல்களை இணையத்தில் பார்த்துள்ளார்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் ஏற்கெனவே, மியாசாகி மாம்பழங்களை விவசாயம் செய்து  வருவதை அறிந்தார். அதன் பிறகு, சிறிய அளவில் சாகுபடி செய்வதற்காக மியாசாகி மரக்கன்றுகளை வாங்கி, தனது தாயாரிடம் கொடுக்க முடிவு செய்தார்.

பிலிப்பைன்ஸிலிருந்து 10 மியாசாகி மரக்கன்றுகளை தலா 6500 ரூபாய்க்கு ஆன்லைனில் வாங்கி விவசாயியான அம்மாவுக்கு பரிசளித்தார். இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மாமரமும் சராசரியாக  12 மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளன.

ஏற்கெனவே, மியாசாகி மாம்பழ வணிகத்தில் லாபம் பார்த்து கொண்டிருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த  விவசாயி வார்புட்கரின் ஆலோசனையில், ஒரு மாம்பழத்துக்கு 10,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  மியாசாகி மாம்பழத்தை மற்ற விவசாயிகளும் சாகுபடி செய்ய முன் வந்துள்ளனர்.

Tags: மியாசாகிMiyazaki's world's most expensive mango: One mango costs Rs. 10thousandsஉலகின் விலையுயர்ந்த மாம்பழம்miyazaki mango
ShareTweetSendShare
Previous Post

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி புகார்!

Next Post

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies