மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம் : ஊதியக் குறைப்பால் பழிவாங்கிய ஓட்டுநர்!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம் : ஊதியக் குறைப்பால் பழிவாங்கிய ஓட்டுநர்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனே அருகே நான்கு பேரின் உயிரைப் பறித்த மினி பேருந்து தீ விபத்திற்கு சதிச்செயலே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த புதன்கிழமை, புனேவின் ஐடி மையமான ஹின்ஜேவாடியில் அருகே ஒரு மினிபஸ்  தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த மினிபஸ் ஒரு கிராபிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். 14 ஊழியர்களுடன் வார்ஜேயிலிருந்து ஹின்ஜேவாடிக்கு சென்று கொண்டிருந்த மினிபஸ் திடீரென தீப்பிடித்தது.

பேருந்தின் பின்புறத்தில் உள்ள அவசர வெளியேறும் கதவைத் திறக்க முடியாததால் நான்கு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.  வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், அவசரக்கால வெளியேறும் கதவு ஏன் பழுதடைந்தது என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் காவல் துறை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறியிருந்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் உள்ள வயரிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்  தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அடையாளம் காணப் பட்டது. பல்வேறு தடயங்களையும் தீ பரவிய விதத்தையும் ஆராய்ந்த பிறகு, ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுமா?  என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் வாகனத்தை ஆய்வு செய்தனர். பிறகு  தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மினிபஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  56 வயது ஓட்டுநரின் திட்டமிட்ட சதியே மினி பஸ்ஸின் தீவிபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.  தீவிர விசாரணையில் மினிபஸ்ஸுக்கு  தீ வைத்ததாக ஓட்டுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலுவலகத்தில் தனது சம்பளக் குறைப்பு வேதனையளித்ததாகவும், மினி பேருந்தில் பயணிக்கும் சில ஊழியர்கள் தம்மை தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதனால், பழிவாங்கும் எண்ணத்துடன் ஓட்டுநர் மினி பேருந்துக்குள் தீ வைத்துள்ளார் என்றும்  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினி பேருந்துக்குள் தீ வைக்க benzene solution  மற்றும் தீப்பெட்டியைப் பயன்படுத்தியதாக கூறியுள்ள ஓட்டுநர், தீ வைத்ததும், விரைவாக வெளியே குதித்து தப்பியதாகவும் ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  தீ வைப்பதற்கு முன்னதாக, யாரும் தப்பிக்க முடியாதபடி, வேண்டுமென்றே பின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

அதிருப்தியடைந்த ஓட்டுநரின் சதியே  விபத்துக்குக் காரணம் என்பது பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே, மாநில சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் ரசானே,  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Mini bus fire accident turns deadly: Driver takes revenge for pay cut!மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம்புனே
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

Next Post

திமுக அரசுக்கு எதிர்ப்பு – பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies