மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம் : ஊதியக் குறைப்பால் பழிவாங்கிய ஓட்டுநர்!
Nov 15, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம் : ஊதியக் குறைப்பால் பழிவாங்கிய ஓட்டுநர்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனே அருகே நான்கு பேரின் உயிரைப் பறித்த மினி பேருந்து தீ விபத்திற்கு சதிச்செயலே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த புதன்கிழமை, புனேவின் ஐடி மையமான ஹின்ஜேவாடியில் அருகே ஒரு மினிபஸ்  தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த மினிபஸ் ஒரு கிராபிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். 14 ஊழியர்களுடன் வார்ஜேயிலிருந்து ஹின்ஜேவாடிக்கு சென்று கொண்டிருந்த மினிபஸ் திடீரென தீப்பிடித்தது.

பேருந்தின் பின்புறத்தில் உள்ள அவசர வெளியேறும் கதவைத் திறக்க முடியாததால் நான்கு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.  வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், அவசரக்கால வெளியேறும் கதவு ஏன் பழுதடைந்தது என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் காவல் துறை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறியிருந்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் உள்ள வயரிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்  தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அடையாளம் காணப் பட்டது. பல்வேறு தடயங்களையும் தீ பரவிய விதத்தையும் ஆராய்ந்த பிறகு, ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுமா?  என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் வாகனத்தை ஆய்வு செய்தனர். பிறகு  தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மினிபஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  56 வயது ஓட்டுநரின் திட்டமிட்ட சதியே மினி பஸ்ஸின் தீவிபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.  தீவிர விசாரணையில் மினிபஸ்ஸுக்கு  தீ வைத்ததாக ஓட்டுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலுவலகத்தில் தனது சம்பளக் குறைப்பு வேதனையளித்ததாகவும், மினி பேருந்தில் பயணிக்கும் சில ஊழியர்கள் தம்மை தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதனால், பழிவாங்கும் எண்ணத்துடன் ஓட்டுநர் மினி பேருந்துக்குள் தீ வைத்துள்ளார் என்றும்  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினி பேருந்துக்குள் தீ வைக்க benzene solution  மற்றும் தீப்பெட்டியைப் பயன்படுத்தியதாக கூறியுள்ள ஓட்டுநர், தீ வைத்ததும், விரைவாக வெளியே குதித்து தப்பியதாகவும் ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  தீ வைப்பதற்கு முன்னதாக, யாரும் தப்பிக்க முடியாதபடி, வேண்டுமென்றே பின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

அதிருப்தியடைந்த ஓட்டுநரின் சதியே  விபத்துக்குக் காரணம் என்பது பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே, மாநில சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் ரசானே,  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Mini bus fire accident turns deadly: Driver takes revenge for pay cut!மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம்புனே
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

Next Post

திமுக அரசுக்கு எதிர்ப்பு – பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies