பள்ளிக் கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? - அண்ணாமலை கேள்வி!
May 9, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக் கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக் கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக அரசை, அமைச்சர்களை நோக்கி, கேள்வி எழுப்பும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஓடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் @tn_factcheck ஊழியர் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் அவருக்கும் சேர்த்து விளக்கமளிப்பதும், அவர் பின்னால், திமுக அரசும், அமைச்சர்களும் மறைந்து கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும், பல பள்ளிகளில், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலைமை இப்படி இருக்க, பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டசபையிலேயே கூறுகிறார்கள். அப்படி எங்குதான் பள்ளிகள் கட்டியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறையும் @tn_factcheck ஊழியர் ஓடி வந்திருக்கிறார். 2025 – 26 ஆண்டுக்கான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றால், இந்த https://financedept.tn.gov.in/en/my-documents/2020/07/DemandBook_43-1.pdf… இணைப்பில் இருப்பது என்ன?

அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும், அவற்றின் பெயரைக் குறிப்பிட்டு, மானியக் கோரிக்கை அட்டவணையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறுவது வழக்கம். 2022 – 23, 2023 – 24 ஆண்டுகளில் ரூ. 1,887.75 கோடி செலவு செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 – 24 ஆண்டில், மூலதன உட்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்ட நிதி ரூ.352 கோடி மட்டுமே. எந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1,887.75 கோடி செலவிடப்பட்டது? என வினவியுள்ளார்

நபார்டு வங்கியிடமிருந்து பெற்ற, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே தவிர, நீங்கள் கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லையே ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2023 – 24 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்ததும், அதில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படாததும், திமுக அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கையிலேயே இருக்கிறது.

ஆனால் நீங்கள் செலவு செய்ததாகக் கூறும் ரூ. 429.67 கோடி, எந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது? உங்களிடம் நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் இருந்தால், எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் எதற்கு இத்தனை தயக்கம்? எதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: tn_factcheck employeeDMK government and ministers.white paper on school buildingsannamalaiTamil Nadu BJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் மூவர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

Next Post

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies