தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையாத வகையில் மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.