SOFTWARE ENGINEER வேலைக்கு வேட்டு வைக்கும் AI ? : வைரலாகும் ஸ்ரீதர் வேம்பு பதிவு!
Jul 27, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SOFTWARE ENGINEER வேலைக்கு வேட்டு வைக்கும் AI ? : வைரலாகும் ஸ்ரீதர் வேம்பு பதிவு!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

AI தொழில்நுட்பத்தின் வருகை, பல software engineerகளின் வேலையை காலி செய்துவிடும் என்று  OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இதனையே வேறுவிதமாக, 90 சதவீத மென்பொருள் குறியீட்டு முறைகளை இனி AI எழுதும் என்று Zoho நிறுவனத் தலைமை அதிகாரி  ஸ்ரீதர் வேம்புவும் தெரிவித்துள்ளார்.  software engineer-களின் வேலைக்கு AI  வேட்டு வைக்குமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

சிலர் செயற்கை நுண்ணறிவால், மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வேறு சிலர் AI, மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர்.

ஏற்கெனவே, AI  தொழில்நுட்பத்தால், software engineer களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியிருந்தார்.  செயற்கை நுண்ணறிவைச் சரியாகக் கையாளும் போது, இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாகச் செய்துமுடிக்க உதவியாகவே  இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அதனால், வரும் ஆண்டுகளிலும், IT துறையில், software engineer தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும் என்று நம்பப் பட்டது.

இந்நிலையில், Ben Thompson உடனான நேர்காணலில், OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான   sam altman, செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால், இனி software engineer-களுக்கான தேவை வெகுவாக குறைந்து விடும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், பல IT நிறுவனங்களில் 50 சதவீத மென்பொருள் குறியீட்டை AI தான் எழுதுகிறது என்று உறுதிப்படுத்தி இருந்தார்.

Anthropic நிறுவனத்தின் CEO ((Dario Amodei)) டாரியோ அமோடியும், இன்னும் 12 மாதங்களுக்குள் அனைத்து மென்பொருள் குறியீடுகளையும் AI எழுதும் என்று கணித்திருந்தார். மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க்க்கும்  கடந்த ஜனவரி மாதம் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.  கடந்த ஆண்டு, Nvidia CEO ஜென்சன் ஹுவாங், எதிர்காலத்தில், குறியீட்டு முறையைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அந்தப் பணியை AI  செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவாதத்தில் ,இப்போது ZOHO ஸ்ரீதர் வேம்புவும்,  AI 90 சதவீத  குறியீட்டை எழுதும் என்பதை ஒப்புக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், software engineer எழுதும் குறியீட்டில்  90 சதவீதம் (‘boiler plate’) “பாய்லர் பிளேட்” வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு புரிதலுக்காகச் சொல்லவேண்டும் என்றால், பாய்லர்பிளேட் என்பது அடிப்படை உள்ளடக்கங்கள் மற்றும் அடிப்படை SERVER பக்கத்துக்கு பொருத்தமான  கிக்-ஸ்டார்ட் டெம்ப்ளேட் ஆகும். அதாவது, கட்டுமானத் தொகுதிகள் இல்லாத வீட்டின் வரைபடத்தைப் போன்றதாகும்.

மனிதர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த வடிவங்களை அங்கீகரித்து செயலாக்குவதில் AI சிறந்து விளங்குகிறது. இருப்பினும், முற்றிலும் புதிய வடிவங்களை உருவாக்கும் திறன் AI க்கு உள்ளதா? என ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார். ZOHO ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், 2025 ஆம் ஆண்டில், மென்பொருள் தீர்வுகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் செயல்படுத்துவதில்  AI  பயன்படுத்தப்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும்,  மென்பொருள் பொறியியலில்     AIக்கான சர்வதேச சந்தை இந்த ஆண்டுக்குள்,57.2 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 33.4 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

AI குறியீட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று 75 சதவீத  டெவலப்பர்கள் நம்புவதாக  GitHub நடத்திய  கருத்துக் கணிப்பு கூறுகிறது. கூடுதலாக, IDC நடத்திய ஒரு ஆய்வில், இந்த ஆண்டில், குறிப்பிடத்தக்க 90 சதவீத  நிறுவனங்கள் AI-மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மேம்பாட்டில் முதலீடு செய்ய விரும்புவதாகக் கணித்துள்ளது. அதே சமயம் ,85 சதவீத  வணிகங்கள் AI-சார்ந்த மென்பொருள் மேம்பாட்டை ஏற்றுக்கொள்ளும் என்று IDC அறிக்கை தெரிவிக்கிறது.

ஒட்டு மொத்தத்தில், IT  துறையில்  AI  தாக்கம், software engineer-களுக்கான பாதிப்பா? வேலை பளுவை குறைக்கும் ஊக்கமா? எனப் போக போக தெரியும் என்கிறார்கள் மென்பொருள் துறை வல்லுநர்கள்.

Tags: SOFTWARE ENGINEERAI hiring SOFTWARE ENGINEER?: Sridhar Nembu's post goes viral!ஸ்ரீதர் வேம்பு
ShareTweetSendShare
Previous Post

அமானுஷ்யம் சாத்தான் – இது மீரட் திகில்!

Next Post

FRENCH FRIES வர்த்தகம் : இறக்குமதி To ஏற்றுமதி – இந்தியா சாதித்தது எப்படி?

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies