குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் - உயர் நீதிமன்றம்
May 16, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Mar 23, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கை பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது பரூக் என்பவர் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதற்கு எதிராக முகமது பரூக் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை சிறப்பு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும், அந்த மனுக்களை பெருந்தன்மையுடன் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் ஆஜராகாமல் இருப்பதால் விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி பிடிவாரண்ட் உத்தரவையும் ரத்து செய்தனர்.

NIA மற்றும் பொடா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு விசாரணையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: NIA Special CourtPMK executive Ramalingam murder casemadras high court
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Next Post

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Related News

ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு : டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா

குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்!

இண்டி கூட்டணி பலவீனமாக உள்ளது – ப.சிதம்பரம்

உடுமலைப்பேட்டையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா!

டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்? : முன்னாள் எப்.பி.ஐ இயக்குநரிடம் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியுடன் நடிக்க ஓகேவா என பலரும் கேட்டனர் – ஐஸ்வர்யா லட்சுமி

கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார்‌!

மெக்சிகோ : நெடுஞ்சாலை வாகன விபத்தில் 21 பேர் பலி!

உதகை : ஒரு மணி நேரம் நீடித்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்!

அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து : 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies