தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், காவிரியில் அணை கட்ட துடிக்கும் டி.கே.சிவகுமாருக்கு ரத்தின கம்பளம் விரிக்கலாமா என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.