தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவம் ம ற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், 2024-ம் ஆண்டில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின.
அவர்களில் 47 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 24 ஆயிரம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.