1 கிலோ 1 கோடி ரூபாய் - தலைதூக்கும் "ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா"!
May 11, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1 கிலோ 1 கோடி ரூபாய் – தலைதூக்கும் “ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா”!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…?

உதகையில் நடைபெற்ற ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய  இவர்கள் சில நாட்களுக்கு முன்பு  காவல்துறையிடம் சிக்கினர்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் புதிய வகையான கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த கஞ்சா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 1 கிலோ, 1 கோடி ரூபாய் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கைதானவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவைக் கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கர்நாடகா சென்ற தனிப்படை காவல்துறை அங்கு ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக்  கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மண்ணை பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நீரியல் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை எனப்படுகிறது. இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே பல்வேறு தாவரங்களைப் பலரும் வளர்த்து வரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தைச் சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு சில கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கமான கஞ்சாவைக் காட்டிலும் இந்த முறையில் வளர்க்கப்படும் கஞ்சாவில் போதை மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இதன் விலையும் மிக அதிகம். ஒரு கிலோ கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சி.

கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது எனவும், விளையாட்டு, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான  ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையும் நடைபெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags: ootyஉதகை1 kg for 1 crore rupees - the head-scratching "hydroponics cannabis"!கஞ்சா விற்பனைசிறுவர்கள்மாணவர்கள்
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

காங்கிரசைக் கரைக்கும் முடிவு : பலிக்குமா திமுகவின் கனவு?

Related News

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : விக்ரம் மிஸ்ரி

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies