1 கிலோ 1 கோடி ரூபாய் - தலைதூக்கும் "ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா"!
Jan 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1 கிலோ 1 கோடி ரூபாய் – தலைதூக்கும் “ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா”!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…?

உதகையில் நடைபெற்ற ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய  இவர்கள் சில நாட்களுக்கு முன்பு  காவல்துறையிடம் சிக்கினர்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் புதிய வகையான கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த கஞ்சா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 1 கிலோ, 1 கோடி ரூபாய் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கைதானவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவைக் கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கர்நாடகா சென்ற தனிப்படை காவல்துறை அங்கு ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக்  கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மண்ணை பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நீரியல் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை எனப்படுகிறது. இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே பல்வேறு தாவரங்களைப் பலரும் வளர்த்து வரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தைச் சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு சில கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கமான கஞ்சாவைக் காட்டிலும் இந்த முறையில் வளர்க்கப்படும் கஞ்சாவில் போதை மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இதன் விலையும் மிக அதிகம். ஒரு கிலோ கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சி.

கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது எனவும், விளையாட்டு, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான  ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையும் நடைபெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags: சிறுவர்கள்மாணவர்கள்ootyஉதகை1 kg for 1 crore rupees - the head-scratching "hydroponics cannabis"!கஞ்சா விற்பனை
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

காங்கிரசைக் கரைக்கும் முடிவு : பலிக்குமா திமுகவின் கனவு?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies