1 கிலோ 1 கோடி ரூபாய் - தலைதூக்கும் "ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா"!
Oct 4, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1 கிலோ 1 கோடி ரூபாய் – தலைதூக்கும் “ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா”!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…?

உதகையில் நடைபெற்ற ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய  இவர்கள் சில நாட்களுக்கு முன்பு  காவல்துறையிடம் சிக்கினர்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் புதிய வகையான கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த கஞ்சா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 1 கிலோ, 1 கோடி ரூபாய் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கைதானவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவைக் கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கர்நாடகா சென்ற தனிப்படை காவல்துறை அங்கு ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக்  கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மண்ணை பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நீரியல் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை எனப்படுகிறது. இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே பல்வேறு தாவரங்களைப் பலரும் வளர்த்து வரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தைச் சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு சில கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கமான கஞ்சாவைக் காட்டிலும் இந்த முறையில் வளர்க்கப்படும் கஞ்சாவில் போதை மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இதன் விலையும் மிக அதிகம். ஒரு கிலோ கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சி.

கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது எனவும், விளையாட்டு, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான  ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையும் நடைபெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags: சிறுவர்கள்மாணவர்கள்ootyஉதகை1 kg for 1 crore rupees - the head-scratching "hydroponics cannabis"!கஞ்சா விற்பனை
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

காங்கிரசைக் கரைக்கும் முடிவு : பலிக்குமா திமுகவின் கனவு?

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies