ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் - சென்னை உயர்நீதிமன்றம்
Aug 15, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் – சென்னை உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Mar 25, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல், 800-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருப்பதாக பத்திரிகைகளில் செய்து வெளியானது.

அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறையில் உள்ள ஜாமின் பெற்ற கைதிகள் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு, அவர்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகள் தினசரி அடிப்படையில் நடந்து வருவதாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஜாமின் பெற்ற பிறகும் சிறையில் உள்ள கைதிகள் குறித்த விவரங்களை சட்டப்பணிகள் ஆணையத்திடமோ, சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும் என சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஜாமின் வழங்கப்பட்டவர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஜாமின் பெற்ற பிறகும் கைதிகள் சிறையில் இருந்து வெளிவர தாமதமாவது மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு, சிறை அதிகாரிகளுக்கும், சட்ட பணிகள் ஆணையத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: madras high courtviolation of human rights.delay in the release of prisoners on bail is a violation of human rights.ustices S.M. Subramaniam
ShareTweetSendShare
Previous Post

கேரள மாநில பாஜக தலைவராக ராஜிவ் சந்திரசேகர் தேர்வு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies