உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாரணாசிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கொட்டகைகள் நிறுவப்பட்டுள்ளன.