வங்கதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது என்பது
தவறான தகவல் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இடைக்கால அரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற, ராணுவ தலைமை தளபதி முயற்சித்து வருவதாக தகல் பரவியது. இதனை முகமது யூனுஸ் மறுத்துள்ளார்.