கேள்விக்குறியான வாழ்வாதாரம் : வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்!
Aug 20, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் 6 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போராட்டத்தால்  மூன்று லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும்,  அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்  விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஏராளமான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் மற்றும் நாடா நூல் பெற்று அதனைத் துணியாக நெசவு செய்து கொடுத்து அதற்காக விசைத் தறி உரிமையாளர்கள் பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் இது நடைமுறையிலிருந்து வருகிறது. விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு மீட்டர் காடா துணி நெய்து கொடுத்தால் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகை கூலியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு தரப்பு பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது ஒப்பந்தம் செய்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காமல் குறைத்து வழங்குவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். மின்கட்டணம், விலைவாசி உள்ளிட்டவை  அதிகரித்துள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் போதுமானதாக இல்லை எனவும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 10 ஆயிரம்  விசைத்தறிக்கூடங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தை மூலம் தமிழக அரசு போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் எனவும் விசைத்தறியை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கு விசைத்தறி தொழில் என்பதே இருக்காது எனக் குமுறல் எழுந்துள்ளது. உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: tamil janam tvQuestionable livelihood: Power loom owners in agony!வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்விசைத்தறி
ShareTweetSendShare
Previous Post

மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த பவானி ஆற்றின் நீர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு!

Next Post

தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies