கேள்விக்குறியான வாழ்வாதாரம் : வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்!
Sep 16, 2025, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் 6 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போராட்டத்தால்  மூன்று லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும்,  அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்  விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஏராளமான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் மற்றும் நாடா நூல் பெற்று அதனைத் துணியாக நெசவு செய்து கொடுத்து அதற்காக விசைத் தறி உரிமையாளர்கள் பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் இது நடைமுறையிலிருந்து வருகிறது. விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு மீட்டர் காடா துணி நெய்து கொடுத்தால் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகை கூலியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு தரப்பு பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது ஒப்பந்தம் செய்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காமல் குறைத்து வழங்குவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். மின்கட்டணம், விலைவாசி உள்ளிட்டவை  அதிகரித்துள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் போதுமானதாக இல்லை எனவும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 10 ஆயிரம்  விசைத்தறிக்கூடங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தை மூலம் தமிழக அரசு போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் எனவும் விசைத்தறியை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கு விசைத்தறி தொழில் என்பதே இருக்காது எனக் குமுறல் எழுந்துள்ளது. உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: விசைத்தறிtamil janam tvQuestionable livelihood: Power loom owners in agony!வேதனையில் வாடும் விசைத்தறி உரிமையாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த பவானி ஆற்றின் நீர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு!

Next Post

தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies