ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தைத் தோளில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். அப்போது, சப்பரம் வரும் பாதையில் பெண்கள், சிறுவர், சிறுமியர் வரிசையாகப் படுத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து படுத்துக் கொண்டிருந்தவர்களைத் தாண்டி சப்பரம் கொண்டு செல்லப்பட்டது. திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.