ஏப். 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றுக : சென்னை உயர் நீதிமன்றம்
Jul 2, 2025, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏப். 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றுக : சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என இறுதி கெடு விதித்தது.

மேலும், இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் குறிப்பிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Remove flagpoles by Apr. 21: Madras High Court
ShareTweetSendShare
Previous Post

வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு!

Next Post

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நுழைய அனுமதியில்லை : அமித்ஷா திட்டவட்டம்!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies