அபராதம் மூலம் மட்டும் ரயில்வே துறைக்குக் கடந்த ஆண்டில் 562 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 கோடியே 16 லட்சம் பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.