நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை அருகே உள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி புகுந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ வைரலான நிலையில், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.