கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாமல்பட்டி ரயில்வே பாலத்தின்கீழ் பயணித்தபோது எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.