இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையைக் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் தங்களது கடைகளில் கருப்பு கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.