தஞ்சையில், பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம், ஊழியர் அலட்சியமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
பிபி கார்டன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பல்வேறு வகையான குளிர்பானங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கடந்த 27-ம் தேதி பெட்ரோல் பங்க்கிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது குழந்தைக்கு மில்க் ஷேக் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மில்க் ஷேக்-கின் அட்டையை பரிசோதித்தப்போது அது காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்குச் சென்று கேட்டபோது, ஊழியர் ஒருவர் அலட்சியமாக பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.