பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெருவின் லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது ட்ருஜிலோவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பல பகுதிகளில் போக்குவரத்தும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.