சீரழிவை நோக்கி அமெரிக்கா : ட்ரம்ப் வைத்த வெடிகுண்டு - பொருளாதார மந்தநிலை அபாயம்!
Jul 25, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீரழிவை நோக்கி அமெரிக்கா : ட்ரம்ப் வைத்த வெடிகுண்டு – பொருளாதார மந்தநிலை அபாயம்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. பணவீக்கம், வேலை இழப்புகள் மற்றும் மந்தநிலை என்று ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் வரப் போகும்  பாதிப்புக்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சஸ்பென்ஸ் முடிந்துவிட்டது. அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி விட்டனர் என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியையும், மோசமான குற்றவாளிகள் என்று தான் பட்டியலிட்ட 60 நாடுகளுக்குப் பரஸ்பர வரியையும் விதித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பால் அமெரிக்கா செழிப்படையுமா? என்றால், ட்ரம்ப் நினைத்தது போலவே, எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். பரஸ்பர வரி என்ற  ஆபத்தான நடவடிக்கையால், பணவீக்கம், விலைவாசி உயர்வு,வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பொருளாதார வீழ்ச்சி உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால்,  இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிப்பதால், விலைவாசி அதிகரிக்கும்.    இதனால், முதலில் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள் தான்.  இது ஒன்றும் புதிதல்ல ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்திலும் இப்படித் தான் நடந்தது.  2018ஆம் ஆண்டு, தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான உபகரணங்களைத் தடுக்க, வாஷிங் மெஷின் மீது ட்ரம்ப் இறக்குமதி வரி விதித்தார். இதன் விளைவாக, அமெரிக்காவில் வாஷிங் மெஷின்கள் விலை சராசரியாக 12 சதவீதம் உயர்ந்தது.

இப்படி, இறக்குமதி வரியால் ஏற்படும் விலைவாசி உயர்வு ,  பணவீக்கமாக மாறும். இதனால் அமெரிக்க மத்திய வங்கிக்கு   நீண்ட காலத்துக்கான அதிக வட்டி விகிதங்களை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் டாலர் மதிப்பு உயரும், இது, அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கும்.

கடந்த ஆண்டு, 3.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது.  ஒரு வீட்டுக்கு 25,000 டாலருக்கும் அதிகமாகும். ட்ரம்பின் புதிய வரி விதிப்பால், அமெரிக்காவுக்கு  இறக்குமதி செய்யப்படும் பல டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் விலைகள் எதிர்பாராத அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சொல்லப்போனால், அமெரிக்காவில் ஒரு வீட்டுக்கு 7,300 டாலர் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

பரஸ்பர வரிகளுடன் கூடிய முழு உலகளாவிய பதிலடி, உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலையை உருவாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து, 60 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட எட்டு கார்களில் ஒன்று அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. பரஸ்பர வரிகள் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்தால், நிறுவனங்களின் லாபம் குறையும். அதன் காரணமாக, இங்கிலாந்து கார் உற்பத்தித் துறையில் பல்லாயிரக்  கணக்கான வேலை வேலை இழப்புகள் ஏற்படும். இதனால், இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும்.

உலகளாவிய செமிகண்டக்டர் தொழில்துறைக்கு, ஆசியா நிலைக்களமாக உள்ளது. அமெரிக்க AI தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான சிப் உற்பத்தியில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பில் சீனாவுக்குத் தான் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா பதிலடி கொடுத்தால், உலகளாவிய ஐடிமற்றும் AI  துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்புக்கு உலக நாடுகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினால், சர்வதேச அளவில் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படும். அதனால் உலகெங்கிலும் விலைவாசி கூடும். அந்தந்த நாடுகளில் பணவீக்கம் அதிகமாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

அடுத்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு சதவீதம் அளவுக்குச் சுருங்கும் என்றும், அதனால்,  2.5 மில்லியனுக்கும் அதிகமான  வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டுக்குள்  உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம் 40 சதவீதம் இருப்பதாக உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன் எச்சரித்துள்ளது.

ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரிக்கு வரி என்ற ட்ரம்பின் வர்த்தகக் கொள்கை, செழிப்பான அமெரிக்காவை உருவாக்காது என்றும், உலக பொருளதார சுழற்சியைச் சீர்குலைத்து விடும் என்றும் சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: americausadonald trump 2025America heading towards decline: Trump's bombshell - risk of economic recession!
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் ‘பரஸ்பர வரி’ : iPhone விலை ரூ.2 லட்சம்?

Next Post

முதல் செங்குத்து தூக்குப் பாலம் : நிறைவேறுகிறது கோடான கோடி மக்களின் கனவு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies