பல்லுயிர் தளத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு - கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கத் தயார்!
Jun 4, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல்லுயிர் தளத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு – கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கத் தயார்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைப்பதற்கு ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகள் பாரம்பரியமான கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். அவர்களின் கோரிக்கை என்ன?… விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் காசம் பட்டி கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் 48 செண்ட் வனப்பகுதியில் அமைந்துள்ளது வீரகோயில். இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்துடன் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்புப் பூஜையும் நடைபெற்று வருகிறது. 800 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியமிக்க வீரகோவில் வனப்பகுதியை காசம் பட்டி கிராம மக்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். வனப்பகுதியில் ஆண்கள் காலணி அணிந்து செல்லக் கூடாது, பெண்களுக்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை இன்றளவும் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சக்திவாய்ந்த தங்கள் தெய்வத்தின் இருப்பிடத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகக் கருதுகிறார்கள் காசம் பட்டி கிராம மக்கள். வீரகோயில் வனப்பகுதியில் 32 வகை பறவைகள், 26 வகை வண்ணத்துப்பூச்சிகள், தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களும் உள்ளன. இதனால், அப்பகுதியைச் சமீபத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளதால் வீரகோவில் வனப்பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காசம் பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்லுயிர் பாரம்பரிய தளம் தங்களுக்கு வேண்டாம் எனவும், வீரகோயில் மட்டும் போதும் எனவும் ஊர்மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

“பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைந்தால் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும், கோயில் கட்டுப்பாடுகள் அழிந்துவிடும், யார் வேண்டுமானாலும் கோயில் வனப்பகுதிக்குள் சென்று பாரம்பரியத்தைச் சீர்குலைக்கக் கூடும்” என வேதனையுடன் கூறுகிறார் காசம் பட்டி கிராம நாட்டாமை பொதியழகன்.

வீரகோவில் பகுதியைப் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்ததைத் திரும்பப் பெறவில்லை என்றால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே ஒப்படைத்துவிட்டு போராட்டம் நடத்துவோம் எனக் கூறுகிறார் காசம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள்.

தங்கள் முன்னோர்கள் பாரம்பரியமாகக் கட்டிக் காத்த வீரகோவில் வனப்பகுதிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தீக்குளிக்கவும் தயாராக உள்ளோம் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறுகிறார் தாமரைச்செல்வி.

மேலும், பல்லுயிர் பாரம்பரிய தள அறிவிப்பைத் திரும்பப் பெறவில்லை என்றால் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று திமுக பிரமுகர் தெய்வம் திட்டவட்டமாகக் கூறினார்.  வீரகோயில் வனப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைந்தால் தங்கள் முன்னோர்களின் வாக்கும், தங்களது நம்பிக்கையும் அழிந்து விடும் என காசம் பட்டி மக்கள் கவலைப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கைக்குத் தமிழக அரசு செவிசாய்க்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: கிராம மக்கள்Villagers oppose biodiversity site - ready to set fire to protect temple!பல்லுயிர் பாரம்பரிய தளம்திண்டுக்கல் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்தக் கேரளா அரசு நடவடிக்கை!

Next Post

வெள்ளை அறிக்கை வெளியிட என்ன பயம் உங்களுக்கு? : அன்பில் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies