மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 5, 2025, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபருடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, மதிப்புமிக்க மித்திர விபூஷண விருதை வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கௌரவித்தார்.

பின்னர் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்திய அரசின் உதவியுடன் சம்போரில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா, இலங்கையின் சிறந்த நட்பு நாடு எனவும் அனுர குமார திசநாயக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் எனக்கூறி தனது உரையைத் தொடங்கினார். பின்னர் பேசிய அவர், தனக்கு வழங்கப்பட்ட விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினைகளின்போது இலங்கைக்கு இந்தியா துணை நின்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குக் கடந்த 6 மாதங்களில் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் மானியமாக இந்தியா கடன் வழங்கியிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இலங்கை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் மகிழ்ச்சிகளுமான செய்தியைத் தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தங்களால் இலங்கை மேன்மேலும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் எனக் கூறிய பிரதமர், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM ModiIndia VS SrilankaWe talked about the livelihood problems of fishermen: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்!

Next Post

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies