கன்னியாகுமரியில் மேகமூட்டம் நிலவியதால் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வார இறுதி நாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண வந்திருந்தனர்.
இந்நிலையில் மேகமூட்டம் காரணமாகச் சூரியனைக் காண முடியாதததால்
ஏமாற்றத்துடன் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் சென்றனர்.