தஞ்சை அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்ததை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சானூரப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் வீட்டு வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார்.
தொடர்ந்து அங்கு வந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.