மணிப்பூர் மாநிலம் லிலோங் பகுதியில் வக்ஃபு விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் அஸ்கர் அலி, வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், அவரது வீட்டைச் சூறையாடி தீ வைத்தது. சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆயுதமேந்திக் கொண்டு அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து லிலோங் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.